

பாலியல் குற்ற வழக்குகளில் புகார் கொடுத்திருக்கும் பெண்களைக் கேவலப்படுத்துவதற்கு அவர்களது நடத்தை குறித்துப் பல்வேறு விதமான அவதூறுகள் பரப்பப்படக்கூடும். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட சீமான் - விஜயலட்சுமி பாலியல் வழக்குப் பிரச்சினைகளில் முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதும் இதுதான்.
தான் விசாரணைக்கு வரவேண்டும் என்று சொல்லப்பட்டதும் பதற்றமான சீமான், விஜய லட்சுமியைப் பாலியல் தொழிலாளி என்று சொன்னதன் மூலம் விஜயலட்சுமியைக் கேவலப் படுத்துவதாக நினைக்கிறார். ஆனால், அங்கு கேவலப்பட்டு நிற்பது அவர்தான் என்பதை சீமான் அறியவே இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான விஷயம்.
கண்ணியத்தைக் குலைக்கலாமா?