பண்ணைப் பயிற்சியால் பெருகிய மகசூல் | வாழ்ந்து காட்டுவோம்!

பண்ணைப் பயிற்சியால் பெருகிய மகசூல் | வாழ்ந்து காட்டுவோம்!
Updated on
2 min read

இராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணி வட்டாரத்திலுள்ள பனைக்குளம் ஊராட்சியில் நாங்கள் வசித்துவருகிறோம். எங்கள் ஊராட்சியில் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நவீன மயமாக்கலின் காரணமாக விவசாயத்தின் முழுப் பலனையும் அடைவதில் நாங்கள் மிகவும் பின்னடைவைச் சந்தித்துவருகிறோம். எங்களது ஊராட்சியில் விவசாயிகளை ஒன்றிணைத்து நாங்கள் ஒரு விவசாய உற்பத்தியாளர் குழுவை உருவாக்கியுள்ளோம்.

எங்கள் பகுதியின் மண்வளம் மிளகாய் பயிருக்கு ஏற்றதாக உள்ளதால் பல விவசாயிகள் இதைப் பயிரிடுகின்றனர். எங்களுக்குப் பண்ணைப் பயிற்சி வழங்குவதற்காக TNRTP திட்டத்தின் மூலம் எங்கள் ஊராட்சியில் உள்ள விவசாய உற்பத்தியாளர் குழுவில் இருந்து 30 பேர் தேர்வு செய்யப்பட்டு சமுதாயப் பண்ணைப் பள்ளி (CFS) உருவாக்கப்பட்டது. விவசாயம் சார்ந்து பல பயிற்சிகளை பெற்றிருந்த ரோஸ்லின், பண்ணைப் பள்ளி பயிற்றுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எவ்வாறு மிளகாய் பயிரிடுவது, மண் வளம், பயிர் ஊக்கிகளைத் தேர்ந்தெடுத்தல், நவீன விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்து விதமான பயிற்சிகளும் சமுதாயப் பண்ணைப் பள்ளியில் எங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சியின் பயனாகத் தற்போது மிளகாய் உற்பத்தியில் சிறந்து விளங்குவதோடு அதிக மகசூலை ஈட்டி வருகிறோம். விவசாயம் பற்றி அறிந்தும் அதை முறையாகச் செய்யாததால் சரியான மகசூலை பெற முடியாமல் இருந்த எங்களுக்குச் சமுதாயப் பண்ணைப் பள்ளியை அமைத்து விவசாயத்தின் முழுப் பலனையும் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருந்த தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்று இல்லத்தரசி; இன்று தொழில்முனைவர் - நான் வினோதினி. கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பஞ்சாயத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வருகிறேன். கேட்டரிங் பின்னணி கொண்ட என் கணவர், தனியார் உணவகத்தில் சமையலர்.

நானும் என் கணவரும் சேர்ந்து ஒரு தொழிலைத் தொடங்க முடிவு செய்தோம். எங்கள் சேமிப்பிலிருந்து ரூ. 3,00,000 மற்றும் அமராவதி மகளிர் சுய உதவிக் குழுமத்திலிருந்து ரூ. 1,00,000 முதலீட்டில் நாங்கள் காகிதப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினோம். சாப்பாட்டு உருளைகள், காகிதத் தகடுகள், காகிதக் கோப்பைகள் போன்றவற்றை உற்பத்தி செய்தோம். எங்கள் தயாரிப்புகளின் தரத்தால் சந்தைப்படுத்துவது எளிதாக இருந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள 40% கடைகளும், திண்டுக்கல், ஈரோடு போன்ற அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் விநியோகித்தோம். இதன் விளைவாக மாதம் ரூ.1,00,000 வரை ஈட்டினோம்.

எங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, பாக்கு மட்டை தட்டு உற்பத்தியில் பன்முகப்படுத்த முடிவு செய்தோம். நமது மகளிர் சுய உதவிக் குழு மூலம் நடத்திய ஒரு கூட்டத்தின்போது, எங்கள் பஞ்சாயத்தின் தொழில்சார் சமூக வல்லுநர், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் பொருந்தும் இணை மானியத் திட்டம் குறித்துச் சொன்னார். ரூ.8,16,000 கடனுக்கு விண்ணப்பித்தோம்.

35 முதல் 40 நாள்களுக்குள் கடனைப் பெற்றோம். ‘அக்ரி லென்ஸ் பிளேட்ஸ் அண்ட் கப்ஸ்’ என்கிற எங்கள் புதிய முயற்சியைத் தொடங்கக் கடன் தொகையைப் பயன்படுத்தினோம். இது எங்கள் வருவாயை மாதத்திற்கு 1,00,000 ரூபாயிலிருந்து 1,60,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுவரை 13 பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். இத்தகைய வாய்ப்பை அளித்த ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்துக்கு நன்றி. இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in