

எழுத்தும் வாசிப்பும் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த நிலை இன்று ஓரளவுக்கு மாறியிருக்கிறது. பெண்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை, தனித்துவமான பிரச்சினைகளை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை, பெண்களின் அக உணர்வுகளைப் பெண்களின் கரங்கள் எழுதுகையில் அவை உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படும். பெண்ணுலகின் சாதனைப் பக்கங்களை உலகுக்குக் காட்சிப்படுத்துவதில் அரிதாக ஆண்களும் பங்களித்திருக்கிறார்கள். பெண்களால் எழுதப்பட்டவையும் பெண்கள் சார்ந்து எழுதப்பட்டவையும் ஒப்பீட்டளவில் குறைவு என்கிறபோதும் அவை நம் வாசிப்பின் தளத்தை விசாலப்படுத்தத் தவறுவதில்லை. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் அப்படியான புத்தகங்களில் சில இவை: