Last Updated : 05 May, 2024 08:29 AM

 

Published : 05 May 2024 08:29 AM
Last Updated : 05 May 2024 08:29 AM

ப்ரீமியம்
பக்கத்து வீடு: சுறாவிடமிருந்து மீண்ட ஹெய்டி

524ஆவது தடவையாகக் கடலுக்குள் குதித்தார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெய்டி எர்னஸ்ட். 74 வயதில் ஸ்கூபா டைவிங் செய்துவிட்டுக் கடைசியாகப் படகில் உள்ள ஏணியில் ஏறியவர், பாதுகாப்புக் கவசங்களைக் கழற்றினார். மீண்டும் கடலுக்குள் குதித்து ஒரு சுற்று நீந்திவிட்டு ஏணியில் வலது காலை வைத்தார். இடது காலை அவரால் தூக்க இயலவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் காலைத் தூக்கியபோது ஒரு சுறாவின் பற்களுக்கு இடையே அவரது கால் இருந்தது. இடது கையால் அதன் தலையில் ஓங்கி அடித்தார். ஆனாலும் அது தன் பிடியை விடவில்லை. பயிற்சியாளர் சுறாவின் வாயிலிருந்து ஹெய்டியின் காலை விடுவித்தார்.

“என்னை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள். ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது. சாகவிட்டு விடாதீர்கள்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மயக்கத்துக்குச் சென்றுவிட்டார் ஹெய்டி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x