Last Updated : 04 Feb, 2024 07:22 AM

 

Published : 04 Feb 2024 07:22 AM
Last Updated : 04 Feb 2024 07:22 AM

ப்ரீமியம்
பக்கத்து வீடு: 4 ஒட்டகங்கள்... 9 மாதங்கள்... ஆளற்ற பாலைவனம் | அமைதியைத் தேடி ஒரு பயணம்

மனிதர்கள் பிற மனிதர்களைப் பார்க்காவண்ணம் கோவிட் பெருந்தொற்று முடக்கியிருந்தது. இது போன்ற ஓர் அனுபவத்தை உலகின் பெரும்பான்மையான மக்கள் அப்போதுதான் சந்தித்தார்கள். ஆனால், 1977ஆம் ஆண்டே 9 மாதங்கள் உலகத்திடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் ராபின் டேவிட்சன். யார் இவர்? எதற்காக இந்தத் தனிமைப்படுத்தல்?

ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ராபின் டேவிட்சன், 12 வயதில் தன் தாயை இழந்தார். அத்தைகளின் பொறுப்பில் வளர்ந்தவர், 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, பல்வேறு வேலை களைச் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தினார். ஒட்டகங்களைப் பராமரிக்கும் வேலையைப் பார்த்தபோது, ஒட்டகங்கள் குறித்தும் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் அறிந்துகொண்டார். ஆனாலும் ‘நான் திறமையற்றவள், யாருக்கும் பயனற்றவள், எதிலும் வெற்றிபெற இயலாதவள்’ என்கிற எண்ணம் ராபினை மன அழுத்தத்தில் தள்ளியது. அதிலிருந்து வெளிவரவும் தனக்கே தன்னை நிரூபித்துக்கொள்ளவும் ஒட்டகங் களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களைக் கடக்கும் முடிவை எடுத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x