Published : 21 Jan 2024 08:39 AM
Last Updated : 21 Jan 2024 08:39 AM

ப்ரீமியம்
இலக்கியப் பெண்களை ஏற்க முடியாத ஆண் மனம்

ஓவியம்: எஸ்.முனீஸ்வரன்

இலக்கியக் குழு ஒன்றில் யாரோ ஒருவர், ‘இலக்கிய விலைமாதுகளுக்கு எழுத்து ஒரு போர்வை’ என்னும் தலைப்பில் எழுதியிருந்ததை வாசித்துப் பல நாள்கள் ஆன பிறகும் அக்கட்டுரையின் மீதான எண்ணம் மனதை விட்டுப் போகவே இல்லை. ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற பிரிவினைகள் இல்லாத போதிலும் பெண்களின் எழுத்தை வைத்து அவளை விலைமாது (கொஞ்சம் நாகரிகம் கருதி இப்படி எழுதுகிறேன்.. அந்த எழுத்தோ கொச்சையாகவே இருந்தது) என்பது எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை.

ஆசைக்கும் நுகர்வுக்கும் அடிமையாகத் தன்னைப் பலிகேட்கும் பலிபீடங்களைப் பெண்கள் உடைத்தெறிந்துகொண்டே வருகிறார்கள். தன்னை வெறும் ஒரு உடல் என்று கடந்து போகும் ஆதிக்க மனோபாவத்தை மிதித்து, தான் சக மனுஷியென உலகுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் பெண். அதை எழுதத் தொடங்கியும் காலங்கள் ஆகிவிட்டன. ஆனால், சமூகத்தோடு தன் ஆற்றலால் உரசிக்கொள்ளும் பெண்களை அவ்வளவு எளிதில் இவ்வுலகம் கரம் நீட்டி வரவேற்பதில்லை. பெண்களை அடித்து வீழ்த்த எடுத்துக்கொள்ளும் வலிமையான ஆயுதம், அவமானப்படுத்தி அவளை ஒடுக்குவதாகவே இருக்கிறது. உடலை அவமானப்படுத்தினால் பின் அவள் எழும்பிவர முடியாது என்று அவமானச் சிலுவையை வசை மொழிகளால் செய்து, விமர்சன ஆணிகளால் அறைகிறார்கள். இதை நான் புதிதாகப் பார்க்கவில்லை. இந்த அவமானக் குருதியைச் சிந்தாமல் சமூகத்தில் எந்தப் பெண்ணும் வந்திருக்க முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x