Published : 24 Dec 2023 08:07 AM
Last Updated : 24 Dec 2023 08:07 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 12: பெண்ணைத் தெய்வமாக்கும் சதி

இந்தியாவின் குறிப்பிட்ட சில இனங்களைச் சேர்ந்த பெண்களின் இல்லறக் கடமையாகச் சொல்லப்பட்ட ‘சதி’யைப் போருக்குப் பிந்தைய சூறையாடல்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும் அந்நாளில் பெண்கள் கைகொண்டது வேதனையானது. சில நேரம் மன்னர்களின் இறப்பைத் தொடர்ந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களை மாய்த்துக்கொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது. நெசவாளர், நாவிதர் போன்ற உழைக்கும் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மத்தியிலும் அன்றைக்கு ‘சதி’ நடைமுறையில் இருந்துள்ளது.

1724இல் ஜோத்பூர் மார்வார் அஜித் சிங்கின் மரணத்துக்குப் பிறகு 66 பெண்களும் பூந்தி அரசர் புத் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து 84 பெண்களும் ‘சதி’க்குத் தங்களைப் பலிகொடுத்தனர். ராஜபுத்திரர்கள் மட்டுமல்லாமல் சீக்கியர்கள், மராட்டியர்களில் சில பிரிவினர் மத்தியிலும் ‘சதி’ வழக்கத்தில் இருந்தது. ‘சதி’ வழக்கத்தைக் கண்டித்ததோடு அதைச் சீக்கியர்கள் மத்தியில் தடைசெய்வதாக மூன்றாம் சீக்கிய குரு அமர்தாஸ் வலியுறுத்தியபோதும் ராஜா ரஞ்சித் சிங் இறந்தபோது 11 பெண்கள் தங்களை ‘சதி’யின் பெயரால் மாய்த்துக்கொண்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x