Published : 17 Dec 2023 05:12 AM
Last Updated : 17 Dec 2023 05:12 AM

ப்ரீமியம்
வாசிப்பை நேசிப்போம்: புத்தகங்களை ஏமாற்றினேன்

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பாடப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்கள் பற்றிய தெளிவு எனக்கு இல்லை. தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினருக்குப் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ஆண்டு விழாவிற்குத் தேவையான புத்தகங்களை வாங்கிய பின் எனக்குத் தேவையான, குறைவான பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மட்டுமே வாங்கினேன். நான் வாங்கிய புத்தகங்களில் இரண்டு மூன்று பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்து விடுவது வழக்கம்.

என் கணவர் புத்தக விரும்பி. புத்தகங்களை வாசிப்பதோடு அந்தப் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் என்னிடம் கூறுவார். அப்படியும் நான் படிக்கத் தொடங்கவில்லை. மாறாக, ஒவ்வொரு வருடமும் புத்தகக் காட்சியில் தபால் தலை சேகரிப்பதுபோல் பிடித்த புத்தகங்களை வாங்கிச் சேகரித்தேன். அந்த வரிசையில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு எனப் பல நூல்கள் என் வீட்டு அலமாரியை அலங்கரித்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x