

சில உணவுப் பொருள்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அவை புற்று நோய்க்கு வித்திடுகின்றன. உலகச் சுகாதார நிறுவனத்தின் ஓர் அங்க மாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமை (ஐ.ஏ.ஆர்.சி.) அப்படியான உணவுப் பொருள்களை உறுதிப் படுத்தியிருக்கிறது.
அவற்றில் சில:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
தொடர்ந்து சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் 18 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறு கின்றன.
இறைச்சிகளைப் பதப்படுத்த சோடியம் நைட்ரேட், சோடியம் நைட்ரைட் என இரண்டு வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான இறைச்சியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜன் இருப்பதாக ஐ.ஏ.ஆர்.சி. வகைப்படுத்தியுள்ளது.