Published : 29 Oct 2022 06:35 AM
Last Updated : 29 Oct 2022 06:35 AM

ப்ரீமியம்
போதையைத் துற, பாதையைத் தேடு...

ப. சந்திரசேகர்

மது, போதைப் பொருள் பழக்கங் கள் இன்று, நேற்று வந்தவை அல்ல; மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவை இருக்கின்றன. இருப்பினும், அந்தக் காலத்தில் ஒரு வரம்புக்குள் இருந்த போதைப் பழக்கம் பெருகிவரும் மேலை நாட்டு நாகரிக மோகம், நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் மிக வேகமாகப் பரவி இன்றைய இளைய தலைமுறையினரிடம் வேரூன்றி நிற்கிறது.

இளமைப் பருவம் புதிய விஷயங்களை ஆரம்பிப்பதற்கும் பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் ஏற்ற காலம். தன் இளமைக் காலத்தை நண்பர்களோடு சேர்ந்து விதவித மாக அனுபவிக்க வேண்டும் என்ற அதீத ஆசை ஒவ்வொரு இளைஞனையும் திசை தெரியா பறவையைப் போல அலைக் கழிக்கிறது. மது, போதைப் பொருள்களின் பயன்பாடும், அவற்றிற்கு அடிமையாவதும், அதனால் ஏற்படும் வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணம் இதுவே. திடகாத்திரமாக, ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு மாறாகப் போதைப் பழக்கமும் தீய நடத்தைகளும் தடையாக இருக்கும் என்பதைப் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் உணர்வதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x