Published : 24 Sep 2022 09:10 AM
Last Updated : 24 Sep 2022 09:10 AM

ப்ரீமியம்
கர்ப்ப கால மன அழுத்தம்: குழந்தையின் அறிவாற்றலை பாதிக்குமா?

டாக்டர் சரத் பாபு

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியமான மனநலம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுவிடுகிறது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களுக்கு ஆளானால், பிறக்கப் போகும் குழந்தை விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். குறிப்பாக, குழந்தைக்கு மனநலப் பிரச்சினைகள், கவனம் செலுத்துதலில் பிரச்சினை, பெற்றோர் கூறுவதைக் கவனிக்காத தன்மை, அதீத செயல்பாட்டுக் கோளாறு, அறிவாற்றல் வளர்ச்சி பலவீனமடைதல் போன்றவை ஏற்படலாம்.

மரபணுத் தொடர்ச்சி, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் விளைவுகள் மாறலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் மனநலம் சார்ந்த கவலைகளைக் களைய வேண்டியது மிகவும் அவசியம். மனச் சோர்வு, எரிச்சல் உணர்வு, வேறு ஏதேனும் மனக்குழப்பம் உள்ள கருத்தரித்த தாய்மார்கள் உரிய மருத்துவ கவனிப்பை அதற்காகப் பெறுவதில்லை. இந்த நிலை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், அவர்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்வதிலிருந்து தவறிவிடவோ, கர்ப்ப காலத்தில் சில ஆரோக்கியமற்ற நடைமுறைகளுக்கு மாறி விடவோ நேரலாம். இது கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x