Last Updated : 02 Jun, 2022 06:22 PM

 

Published : 02 Jun 2022 06:22 PM
Last Updated : 02 Jun 2022 06:22 PM

ப்ரீமியம்
கையடக்க இசிஜி கருவியைக் கண்டுபிடித்த இந்தியத் தம்பதி

சில ஆண்டுகளுக்கு முன்பு, ராகுல் ரஸ்தோகியின் தந்தைக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட பின்னர், அவரது இதய நலனை உறுதிப்படுத்துவற்காகத் தொடர்ந்து இசிஜிபரிசோதனையும் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவரை மருத்துவமனைக்குத் திரும்பத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ராகுலும் அவருடைய மனைவியும் நொய்டாவில் வசித்துவந்தனர். அவருடைய தந்தையோ லக்னோவில் வசித்துவந்தார். இந்தச் சூழலில் அவரை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

அவரைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவரை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல் வேறு. இந்த நிலையில், வீட்டிலிருந்தே அவரைக் கண்காணிக்க முடியாதா எனச் சிந்திக்கத் தொடங்கினர். அதற்குத் தேவைப்படும் வழிமுறைகளை ஆராயத் தொடங்கினர். தந்தையின் இதய நலனை உறுதிப்படுத்த, இசிஜி கருவியே அவர்களின் முதல் தேவையாக இருந்தது. வீட்டிலேயே ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் கையடக்க் கருவிகளைப் போல, இசிஜி கருவி எதுவும் இருக்காதா என ராகுலின் மனைவி நேகா தேடத் தொடங்கினர். ஆனால், அப்படி எந்த ஒரு கருவியும் பயன்பாட்டில் இல்லை என்பது அவருக்குத் தெரிய வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x