

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமனை உலகளாவிய பிரச்சினையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உடல் பருமனாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த நிலையில், குழந்தைகளின் உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் மதிப்பிட்டுத் தகுந்த முறையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி முறைப்படுத்தும் விதமாக உலகச் சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டலை வெளியிட்டு இருக்கிறது. அந்த வழிகாட்டலின் முக்கிய அம்சங்கள்:
இன்று வீடுகளில் நீரிழிவு நோய் இல்லாத பெற்றோர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. தங்களுடைய நீரிழிவுப் பிரச்சினைகளுக்கே முறையான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைப்பதற்கு, பெற்றோர்கள் நிறைய மெனக்கிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் பிள்ளைகளுக்கும் நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுமானால் அவர்களையும் சேர்த்துக் கவனிப்பது சுமக்க முடியாத சுமையாக மாறிவிடும். முக்கியமாக, பெண் குழந்தைகள் விரைவாகப் பருவமடைவதற்கு அதிக உடல் பருமனும் ஒரு முக்கியக் காரணி. அதிக உடல் எடை, மூட்டுவலியை ஏற்படுத்தும். அது உடற்பயிற்சி செய்வதைக் கடினமானதாக மாற்றும்.
எனவே, உலக சுகாதார நிறுவனம் அண்மையில் விடுத்துள்ள வழிகாட்டலை மனதில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும். அரசும், குழந்தைகளை எளிதில் கவரும் துரித உணவு விளம்பரங்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முறைப்படுத்துவதே, அவர்களின் நலமான வாழ்க்கைக்கும், நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும் அடித்தளம்.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com