Published : 09 Apr 2022 10:40 AM
Last Updated : 09 Apr 2022 10:40 AM

ப்ரீமியம்
சிறு காற்றாலைகள்: அரசு என்ன செய்ய வேண்டும்?

கஜோல், வைசாக் சுரேஷ் குமார்

காற்றாலை மின் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத, வற்றாத மின் ஊற்றைப் போன்றது. காற்றின் சக்தியை நீர் இறைப்பதற்கும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கும் பாரம்பரியமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறோம். காற்றாலை விசிறியின் சுழற்சிப் பரப்பு (Swept area) 200 சதுர மீட்டருக்குக் கீழ் இருப்பது, 50 கிலோவாட் மின்னுற்பத்திக்குக் கீழ் உள்ளவற்றைச் சிறு காற்றாலைகள் (Small wind turbine) என்று சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission) வரையறுக்கிறது. அதே நேரம், இந்தியாவில் 100 கிலோவாட் மின்னுற்பத்தி வரை சிறு காற்றாலைகளாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.

விவசாயப் பண்ணைகள், தொலைதூர, கிராமப்புற தொலைத்தொடர்பு கோபுரங்கள், தனித்து இயங்கும் கட்டிடங்களில் சிறு காற்றாலைகளைப் பயன்படுத்தலாம். மின் தேவை உள்ள இடங்களில் இவற்றை நிறுவுவது எளிது. அதே போல், பெரிய காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான கடினமான நிலப்பரப்பு, மின்சாரத்தைக் கொண்டுசெல்ல ஏதுவான வழித்தடம் ஆகியவை இல்லாத இடங்களில் சிறு காற்றாலைகளைப் பயன்படுத்தலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x