நலம் நலமறிய ஆவல்: மாபெரும் குற்றம் அல்ல

நலம் நலமறிய ஆவல்: மாபெரும் குற்றம் அல்ல
Updated on
1 min read

என்னுடைய 10-வது வயதிலிருந்து சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். இதனால் தற்போது உயிரணுக்களின் அளவு குறைந்திருக்குமோ என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது. அதோடு ஆணு றுப்பு விறைப்படைவதற்கும் காலதாமதம் ஆகிறது. எனக்கு ஆலோசனை கிடைக்குமா?

- சரவணகுமார்

இக்கேள்விக்கு செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர் பதில் அளிக்கிறார்:

சுயஇன்பத்தை மாபெரும் குற்றச் செயலாக நினைப்பது தவறு. பருவ வயதில் ஏற்படும் உளவியல்ரீதியான ஆர்வக்கோளாறுதான் இது. ஆனால், அதுவே ஒரு கட்டாயமாக மாறும்போது உடல் சோர்வு, மனத்தளர்வு போன்ற உபாதைகள் உண்டாகும். எனவே, அந்த எண்ணத்திலிருந்து விடுபட முயலுங்கள். உங்களுக்கு விறைப்படைதல் சற்று தாமதப்படுதல் சில நேரம் இயல்புதான். உடல் அசதி, மனச்சோர்வு இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

நல்ல உணவு, எளிய உடற்பயிற்சிகள், முறையான யோகா பயிற்சிகள் போன்றவை இதற்கு உதவும். பழங்களில் மாதுளை, செவ்வாழை நல்லது. கீரைகளில் முருங்கை மற்றும் புளிச்ச கீரை மிகவும் நல்லது. வாரம் இரு முறை மீன் மற்றும் ஆட்டிறைச்சி உண்பது பலன் தரும். வாரம் ஒரு முறை வேகவைத்த உருளைக் கிழங்கை மிளகு தூவியும், வாழைப்பூவும் சாப்பிட்டுவாருங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in