

மின்சாரக் கட்டணம் அல்லது குழந்தையின் கல்விக் கட்டணம் போன்ற முக்கியமான ஒன்றைக் கட்ட வேண்டும் என்பதற்காக உங்கள் திறன்பேசியை (Smart phone) எடுக்கிறீர்கள். அடுத்த அரை மணி நேரம் கழித்துத்தான், அந்த வேலையைச் செய்யாமல் முகநூலில் கோஹ்லியா ரோஹித்தா என்று நீங்கள் சண்டை இட்டுக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிகிறது! அவசரமாக ஒருவரை அழைக்க போனை எடுக்கிறீர்கள்.
கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், இன்ஸ்டகிராமில் ஒட்டகச்சிவிங்கியை மலைப்பாம்பு வளைக் கும் காணொளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அண்ணா சாலை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் ஐந்து விநாடிகளுக்கும் மேல் உங்கள் வாகனம் நின்று கொண்டிருக்கிறது.