

நவீன மருத்துவ வளர்ச்சிக்கு முன்பு ஆட்கொல்லிநோய்கள் சமூகத்தைப் பீடித்திருந்தன. நோய்த் தடுப்புத் திட்டங்கள் மூலம் ஆட்கொல்லிநோய்கள் மட்டுப்படுத்தப்பட்டன. தற்போது சமூகத்தில் உடற்சிதைவு நோய்கள் அதிகரித்து வருகின்றன.
இது வயது வரம்புகளைத் தாண்டி சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்குக் காரணமாகிறது. இத்தகைய நோய்கள் முக்கிய உள்ளுறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்து வதோடு உடல் இயக்கச் சிக்கல்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன.