

இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குச் சமீபத்தில் தான் திருமணம் ஆகியிருக்க வேண்டும். மகிழ்ச்சி ததும்பவேண்டிய அந்த மூவரது முகங்களில் கவலை ரேகைகள். என்னவென்று விசாரித்தேன். பெற்றோர்தான் பேசினார்கள். “இவள் எங்களுக்கு ஒரே மகள். எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்தோம். திருமணமும் செய்துவைத் தோம். அவள் ‘உண்டாகியிருக்கிற’ செய்தி கேட்டுச் சம்மந்தி வீட்டுக்குப்போனோம்.
‘உங்கள் பெண்ணுக்கு இதயநோய் இருப்பதை மறைத்து விட்டீர்கள்’ என்று எங்கள் மீது பழியைப் போட்டார்கள். விசாரித்த போது, மருமகள் கர்ப்பமானதும் ஒரு மருத்து வரிடம் அவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.