

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக உடல் சோர்வு, அதிக வியர்வை, உடல் வெப்பம் அதிகரித்தல் போன்ற கோடைக்காலத்துக்கே உரிய உடல் பாதிப்புகளை மக்கள் ஏற்கெனவே அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
பருவக் காலத்துக்கு ஏற்ப நம்முடைய உணவுமுறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் மற்ற பருவக் காலங்களைவிடவும் கோடைக் காலத்தில் சாப்பிடும் உணவில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும்.