

இந்தியாவில் அனைவரும் கவனிக்க வேண்டிய பிரச்சினையாக உடல் பருமன் (Obesity) மாறி இருக்கிறது. இந்தியாவில் 35 கோடி பேர் உடல் பருமன் உள்ளவர்கள் என்கிறது ஒரு தேசிய ஆய்வு. 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 44 கோடி ஆகிவிடும் என்கிறது மற்றோர் ஆய்வு. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய ‘மனதின் குரல்’ உரையில், இந்தியாவில் உடல் பருமன் பிரச்சினையை முறியடிக்க வேண்டும் என்று பேசியிருப்பதிலிருந்தே இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
அடிப்படைக் காரணம் என்ன? - உடல் பருமனுக்கு அடிப்படைக் காரணம் நாம் சாப்பிடும் உணவு முறைதான் என்றாலும், அதையும் தாண்டி வேறு பல காரணங்களும் இருக்கின்றன என்பதைச் சென்ற வாரம் பார்த்தோம். அவை ஆளுக்கு ஆள் வேறுபடும் தன்மையுடையவை.