Published : 29 Jul 2023 06:13 AM
Last Updated : 29 Jul 2023 06:13 AM

ப்ரீமியம்
குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 06: பரிசுகளும் வெகுமதிகளும்

சிறார் நல்லபடியாக நடந்து கொள்ளும்போது அவர்களைப் பாராட்டுவது நன்னடத்தையை ஊக்குவிக்கும். இதன் நீட்சியாக, சிறார் எப்போதெல்லாம் நல்லபடியாக நடந்து கொள்கிறார்களோ அந்த நேரத்தில் பரிசு அல்லது வெகுமதிகளை வழங்குவது இந்த வகைச் சிறாரின் நடத்தையைப் பெருமளவு மேம்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.

‘சொல்பேச்சு கேட்காத குழந்தைக்கு லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்களா?’ என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். ஆனால், சற்று எண்ணிப் பார்த்தால் அன்றாட வாழ்வில் பரிசு வழங்கி ஊக்குவிக்கும் பழக்கம், சமூகத்தில் பரவலாக உள்ளது என்பது தெரியவரும். வெற்றி பெற்ற விளையாட்டு அணிக்குப் பரிசளிப்பது, சிறப்பாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (போனஸ்), வகுப்பில் முதலாவதாக வரும் மாணவருக்குக் கொடுக்கப்படும் நற்சான்றிதழ் ஆகிய யாவுமே பரிசுகள்தாம். எனவே, சரியான முறையில் வழங்கப்பட்டால் பரிசுகளும் வெகுமதிகளும் நன்னடத்தைக்கு உரமாக அமையும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x