Published : 05 Apr 2023 06:10 AM
Last Updated : 05 Apr 2023 06:10 AM
“உங்களால் ஓசோன் படல மெலிவை சரிசெய்ய முடியுமா? வற்றிப்போன நீரோடைகளில் மீன்களை உயிர்ப்பிக்க வைப்பீர்களா? அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் கொண்டுவர முடியுமா? இப்போது பாலைவனமாகக் காட்சியளிக்கும் வளமிக்கக் காடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு மாற்றும் வழியை அறிவீர்களா? நான் ஒரு குழந்தை, எனக்குத்தான் தெரியாது. ஆனால், உங்களுக்கும் தெரியவில்லையே... பிறகு எந்தத் தைரியத்தில் இவ்வளவு வேகமாக இயற்கையை அழிக்கிறீர்கள்?”
கனடாவைச் சேர்ந்த செவன் கலிஸ் சுசூகி (Severn Cullis-Suzuki) என்கிற 12 வயதுச் சிறுமி, 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஐ.நா. சுற்றுச்சுழல் மாநாட்டில் உதிர்த்த வார்த்தைகள் இவை. யாரும் எதிர்பாராத சூழலில் திடீரென மேடையேறி, ஐந்து நிமிடங்களில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் வாயடைக்கச் செய்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT