Last Updated : 31 May, 2017 11:54 AM

 

Published : 31 May 2017 11:54 AM
Last Updated : 31 May 2017 11:54 AM

குழந்தைப் பாடல்: நீர் காப்போம்

பல்லைத் துலக்கும் போது

குழாயை நிறுத்த வேண்டும்!

நீரை விரயம் செய்யாமல்

குளித்துப் பழக வேண்டும்!



அடிக்கடி ஆடைகள் மாற்றும்

பழக்கம் கைவிட வேண்டும்!

துணிகளை அலசும் நீரை

செடிக்கு ஊற்ற வேண்டும்!



வீட்டில் மழைநீர் சேமிக்க

தொட்டி அமைக்க வேண்டும்!

கழிப்பறைக்கு அந்நீரைப்

பயன்படுத்திட வேண்டும்!



ஒவ்வொரு மனிதரும் தினமும்

சிறிதே நீரைச் சேமிக்க

உலகில் நீர்வளம் பெருகுமே

அதனால் நிலவளம் சிறக்குமே!



நீரின்றி அமையாது உலகு

வள்ளுவர் சொன்ன கருத்தாம்!

மனதில் அதை நிறுத்தி

நடந்தால் நல்லது நமக்காம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x