மீன்களுக்குக் காது உண்டா?

மீன்களுக்குக் காது உண்டா?
Updated on
1 min read

கடல் எப்போதுமே பேரிரைச்சலுடன் இருக்கிறது. கடலுக்குள் உள்ள எரிமலைகள் வெடித்துச் சிதறுகின்றன. கடலுக்குள் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அப்போது ஏற்படும் சத்தங்கள் கடலில் வாழும் மீன்களுக்குக் கேட்குமா? ‘கேட்கும்’ என்றே சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் அளவுக்குக் காதுகள் இல்லை. ஆனால் மீன்களுக்கு ஒலியை உணரும் அமைப்புகள் உள்ளன. அவை மீனின் தலைப்பகுதிக்குள் சிறு துளைகளோடு உட்புறமாக அமைந்துள்ளன. தண்ணீருக்குள் எழும் ஒலி அதிர்வுகளை, இந்தச் சிறு துளைகளின் வழியாக மீன்களால் உணர முடியும்.

மேலும் மீன்களின் உடலில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறுசிறு துளைகள் உள்ளன. இவற்றின் வழியாகவும் தண்ணீரில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை அவை உணரும். குறிப்பாக, வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கிறோமே தங்க மீன்கள், அவற்றுக்கு இந்த உணரும் ஆற்றல் ரொம்ப அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிறிய நீர் அதிர்வுகளைக்கூட இந்த மீன்கள் உடனே உணர்ந்துவிடும் . இதன்மூலம் எதிரிகள் தண்ணீரில் இருப்பதை அந்த மீன்களால் அறிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில் மீன் தண்ணீருக்குள் இருப்பதை மனிதர்களால் அறிய முடியாது. ஆனால், கரையில் நாம் நடமாடுவதை மீன்கள் உடனே உணர்ந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடும்!

தகவல் திரட்டியவர்: எம். அப்துல் ரஹீம்,
7-ம் வகுப்பு, ஊராட்சி நடுநிலைப் பள்ளி, சீர்காழி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in