Published : 16 Nov 2022 06:34 AM
Last Updated : 16 Nov 2022 06:34 AM

ப்ரீமியம்
நேரு கொடுத்த பரிசு!

தினமும் தனக்கு வரும் கடிதங்களைப் படிக்கவும் பதில் அனுப்பவும் சில மணி நேரத்தைச் செலவிடுவார் பிரதமர் நேரு. 1949. அக்டோபர் 2 அன்று ஜப்பானில் இருந்து கடிதம் வந்திருந்தது. அதை எழுதியவர்கள் குழந்தைகள். ‘இரண்டாம் உலகப் போரின்போது, எங்கள் நாட்டில் இருந்த இரண்டு யானைகளை இழந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு யானைகளைப் பரிசாக அனுப்பி வையுங்கள்’ என்று கேட்டிருந்தனர். நேருவும் ஒரு யானையைக் கண்டுபிடித்து, ‘இந்திரா’ என்று பெயர் சூட்டி, ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்!

‘இந்த யானை நான் அனுப்பும் பரிசு அல்ல. இந்தியக் குழந்தைகள் ஜப்பானியக் குழந்தைகளுக்கு அனுப்பும் அன்புப் பரிசு! யானையைப் போல வலிமையையும் பொறுமையையும் புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். பெரியவர்கள்தாம் சாதி, மதம், இனம், மொழி, அரசியல், ஏழை, பணக்காரர் போன்ற விஷயங்களுக்குள் அடைபட்டு, பிரிந்து கிடக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அவற்றில் சிக்கிக்கொள்ளாமல், எல்லாரிடமும் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்’ என்கிற ஒரு கடிதத்தையும் அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பிவைத்தார்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x