Published : 21 Sep 2022 08:05 AM
Last Updated : 21 Sep 2022 08:05 AM

ப்ரீமியம்
கு. அழகிரிசாமி நூற்றாண்டு | குழந்தைகளின் அழகைக் கொண்ட கதைகள்

தமிழ் நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத் தக்கவர் கு.அழகிரிசாமி. தமிழின் சிறந்த சிறுகதைகளில் அவருடைய கதைகளுக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. அதிலும் குறிப்பாகக் குழந்தை கதாபாத்திரங்களை மையமிட்ட புகழ்பெற்ற பல கதைகளை அவர் எழுதியுள்ளார். எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகளின் தனித்த குணங்கள், அழகாகப் பதிவாகியுள்ளான. பொதுவாகப் பெரியவர்கள், குழந்தைகளைத் தங்கள் இடத்தில் வைத்துப் பார்த்து, ‘நீ இப்படிச் செய்யலாமா?’, ‘அப்படி நடக்கலாமா?’ என அறிவுரைகள் சொல்வார்கள். ஆனால், அழகிரிசாமி, குழந்தைகளின் இயல்புடன் பொருத்திப் பார்க்கிறார்.

‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’ போன்ற கதைகள் அழகிரிசாமியின் இந்த அம்சத்துக்கு உதாரணமானவை. இந்த இரண்டு கதைகளும் அழகிரிசாமியின் பிரபலமான கதைகள். இந்த இரண்டு கதைகளிலும் சிறார்களே முக்கியக் கதாபாத்திரங்கள். ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் சிறாருக்கே உரிய விளையாட்டு, கேலிப் பேச்சு, செல்லச் சண்டை என அவர்களது உலகத்தைச் சுவாரசியமாகச் சொல்லியிருப்பார். ஆளுக்கு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, பக்கம் திறந்து காண்பித்து ஒரு விளையாட்டு ஆடுகிறார்கள். சிறார்கள் தலையைக் குனிந்தபடி எந்நேரமும் வீடியோ கேம் விளையாடும் இன்றைய காலகட்டத்தில் இதைப் படிப்பதற்கே ஆசுவாசமாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x