குழந்தைப் பாடல்: தவளையின் கடன்

குழந்தைப் பாடல்: தவளையின் கடன்
Updated on
1 min read

கடன்கொடு கடன்கொடு என்றே

குண்டுத் தவளை கேட்கும்

தர்றேன் தர்றேன் என்று

தாவும் தவளை சொல்லும்

தகரப் பெட்டியின் மீது

தூறல் விழுந்ததைப் போல

தவளைகள் இரண்டும் அங்கே

கடனுக்காகக் கத்தும்

குறுக்கே புகுந்த பாம்பு

கணக்கைச் சரியாய்த் தீர்க்கும்

பாம்பின் வயிற்றில் சென்று

பாடம் கிடைத்தது நன்று

(மழை பெய்யும்போது தவளைகள் ஒரே குரலில் கத்துவதைக் கேட்கும் சிறுவர்கள், தவளைகள் ‘கடன்கொடு, கடன்கொடு’ என்று கேட்பதாகவும் கடன் வாங்கிய தவளைகள் ‘தர்றேன் தர்றேன்’என்று சொல்வதாகவும் கற்பனையாக அமைத்துப் பாடுவார்கள்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in