

திருவிழாவாம் திருவிழா!
தேரிழுக்கும் திருவிழா!
ஒருமுகமாய் மக்களெல்லாம்
ஒன்று கூடும் திருவிழா.
பட்டு ஆடை உடுத்தலாம்;
பாட்டி கையைப் பிடிக்கலாம்;
கொட்டு மேளம் கேட்டதும்
‘குடுகு’ டென்று ஓடலாம்.
ஆனை, குதிரை பார்க்கலாம்;
அதிர் வேட்டுக் கேட்கலாம்.
சேனை போல யாவரும்
திரண்டு கூடிச் செல்லலாம்.
தேரில் சாமி வந்ததும்
தேங்காயோடு போகலாம்.
ஊரா ரோடு நாமுமே
உடைத்து வைத்து வணங்கலாம்.