Last Updated : 25 Nov, 2015 12:17 PM

 

Published : 25 Nov 2015 12:17 PM
Last Updated : 25 Nov 2015 12:17 PM

மேஜிக்... மேஜிக்...கண்ணாடிக்குள் நுழையுமா காசு?

நாணயத்தை வைத்துப் பல மேஜிக் வித்தைகளைச் செய்துவிட்டோம். இந்த வாரமும் நாணயத்தை வைத்துச் சுலபமான ஒரு மேஜிக் வித்தையை செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை?:

# கண்ணாடிக் குவளை

# நாணயம்

மேஜிக்:

# ஒரு கண்ணாடிக் குவளையையும், நாணயத்தையும் மேசை மீது வையுங்கள்.

# குவளையை ஒரு கையால் தூக்கி பிடித்து, இன்னொரு கையில் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

# இப்போது ஜீ.. பூம்..பா... என மேஜிக் மந்திரத்தைச் சொல்லி, கண்ணாடி குவளையின் அடிப்பக்கத்தால் கையில் உள்ள நாணயத்தை மூன்று முறை தட்டுங்கள். இப்போது நாணயம் தானாகக் குவளைக்குள் வந்துவிடும். ஆச்சரியமாக இருக்கிறதா?

மேஜிக் ரகசியம்:

# இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. உண்மையில் நீங்கள் ஒரு நாணயத்துக்குப் பதிலாக இரண்டு நாணயங்களைப் பயன்படுத்த வேண்டும்.

# முதல் நாணயத்தை எல்லோருக்கும் தெரியும்படி பிடித்து, அதைக் குவளையின் கீழ் மூன்று முறை தட்டப் பயன்படுத்தினீர்கள் அல்லவா?

# அதற்கு முன்பாகவே இரண்டாவது நாணயத்தை யாருக்கும் தெரியாமல், குவளையைப் பிடித்திருக்கும் விரல்களுக்குள் மறைத்துப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

# உண்மையில் இந்த இரண்டாவது நாணயம்தான் குவளைக்குள் விழம்.

# முதல் நாணயத்தால் குவளையின் அடிப்பகுதியை மூன்று முறை தட்டும்போது, தந்திரமாக இரண்டாவது நாணயத்தைக் கையிலிருந்து குவளைக்குள் விழ வைக்க வேண்டும்.

# அதேநேரம் முதலாவது நாணயத்தை அப்படியே கையில் விரல்களுக்குள் மறைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

# பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே நாணயம், கண்ணாடிக் குவளைக்குள் நுழைந்துவிட்டது போலவே தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x