Last Updated : 28 Oct, 2015 11:20 AM

 

Published : 28 Oct 2015 11:20 AM
Last Updated : 28 Oct 2015 11:20 AM

குழந்தைப் பாடல்: அடைபட்ட சிங்கம்

சிங்கம் எங்கே பார்க்கிறாய்?

சீறிப் பாய எண்ணமோ?

கொண்டு வந்து உன்னைத்தான்

கூட்டில் போட்டு விட்டோமே!

வெள்ளி போலத் தலைமயிர்

விரித்து நிற்கும் சிங்கமே,

கொள்ளி போன்ற கண்களால்

‘குறுகு’றென்று பார்ப்பதேன்?

கத்தி போன்ற நகங்களால்

கம்பியைத்தான் கீறலாம்.

உயிரைக் கொன்று கம்பியின்

உடலைக் கிழிக்க முடியுமோ!

மிருக ராஜ சிங்கமே,

மிரட்டி ஏனோ பார்க்கிறாய்?

கூட்டை விட்டு வரவேதான்,

பூட்டுப் போட்டிருக்குதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x