மத்தாப்பு

மத்தாப்பு
Updated on
1 min read

கம்பி மத்தாப்பு-அதைக்

கையில் பிடித்ததுமே

தம்பி கொளுத்தினான்-நண்பர்

தாவி வந்தனர்.

நண்பர் அனைவரும்-பார்த்து

நன்கு ரசித்தனர்.

வண்ணப் பொறிகளை-கண்டு

மகிழ்ந்து குதித்தனர்.

“எரிந்த கம்பியை-உடன்

எடுத்துச் சென்று நீ

தெருவின் ஓரமாய்-போட்டுத்

திரும்பி வந்திடு.

நட்ட நடுவிலே-போட்டால்,

நடப்போர் கால்களைச்

சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்

சொன்னார் தந்தையும்.

எரியும் போதிலே-‘ஓஹோ!‘

என்று புகழ்ந்தனர்.

எரிந்து முடிந்ததும்-அந்தோ,

இந்த நிலைமையா!

- நன்றி: சிரிக்கும் பூக்கள் தொகுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in