

ராமு, சோமு இரண்டு பேரிடமும் கொஞ்சம் பணம் இருந்தது. அப்போது ராமு, "நீ எனக்கு ஒரு ரூபாய் தந்தால், நம் இருவரின் பணமும் சரிசமமாகிவிடும். ஒரு ரூபாய் தா" என்று சோமுவிடம் கூறினான்.
அதற்கு சோமு, "இல்லை ராமு, நீ எனக்கு ஒரு ரூபாய் தா. அப்போது உன்னைப் போல் என்னிடம் இரண்டு மடங்கு பணம் இருக்கும்" என்றான்.
அப்படியானால் ராமுவிடமும் சோமுவிடமும் எவ்வளவு பணம் இருந்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
விடை:
ராமுவிடம் ஐந்து ரூபாய், சோமுவிடம் ஏழு ரூபாய்.