

பொதுவாக முதியவர்கள்தான் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற கருத்து உள்ளது. ஆனால், இளைய தலைமுறையினரும்தனிமையால் அதிகமாகப் பாதிக்கப் படுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அனுசரணையான பெற்றோர், பள்ளி, கல்லூரி நண்பர்கள் எனப் பல தரப்பினர் சூழ்ந்திருந்தாலும் தனிமை உணர்வு இன்றைய இளைஞர்களை வாட்டி வதைக்கிறது.