

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலோடு சேர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் பற்றிய பேச்சும் சூடுபிடித்துவிடும். தற்போது 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற சுவாரசியமான சில விஷயங்கள்:
தமிழ் எங்கே?
ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டிச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியானது. அதில் தோனி உள்பட சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள், தமிழில் எழுதப்பட்டிருந்த தங்களது பெயர்களைச் சரியாக அடையாளம் காண வேண்டும் என்று ஒரு சவால்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தக் காணொளியில் ‘சென்னை அணியில் ஒரு தமிழக வீரர்கூட இல்லையே’ எனச் சிலர் சுட்டிக்காட்டி கிண்டலடிக்க, தமிழ்ப் புத்தாண்டில் சிஎஸ்கே தாக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் என நான்கு தமிழக வீரர்களை அணியில் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தது. லைக்ஸ் அள்ளிய இப்பதிவால் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஒருவர்கூட இல்லாதது பற்றிய விவாதம் இன்ஸ்டகிராமில் சூடுபிடித்தது.