Published : 22 Nov 2022 06:42 AM
Last Updated : 22 Nov 2022 06:42 AM

ப்ரீமியம்
ரவுண்டு கட்டும் சவுண்டு மணி

அறுபதுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசித்தும் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டக்கலைகளை ஆடியும் வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த 22 வயது ஒலிப் பொறியாளர் மணிகண்டன். பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையையும் ஆட்டக்கலைகளையும் கற்றுக்கொள்வது மட்டுமன்றி அவற்றை ஆவணப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

“ஊர்த் திருவிழாக்களில் பறை வாசிக்கும் கலைஞர்களைப் பார்த்து அந்த இசையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை வாசிக்கவும் ஆர்வம் பீறிட்டது. ஆனால், இசைக்கருவிகளுக்கும் சாதி சாயம் பூசி, பறையைக் கற்றுக்கொள்ளக் கூடாது என வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. என் மனத்திலோ ஏன் வாசிக்கக் கூடாது என்கிற கேள்வி எழுந்தது. இசை அனைவருக்குமானது தானே என்கிற கேள்வி என்னுள் ஆழமாக எழ, ஊரில் நடந்த பயிற்சிப் பட்டறையின் மூலம் பறை இசையையும் மற்ற கலைகளையும் தடையை மீறிக் கற்றுக்கொண்டேன். பின்னர் தரமணி எம்.ஜி.ஆர்., திரைப்படக் கல்லூரியில் படித்தபோது மாணவர்களுக்கு இலவசமாகப் பறை பயிற்சி வகுப்புகளையும் நடத்தினேன்” என்று தன்னுடைய இசை அறிமுகத்தைச் சொல்கிறார் மணி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x