Last Updated : 15 Jun, 2022 04:20 PM

 

Published : 15 Jun 2022 04:20 PM
Last Updated : 15 Jun 2022 04:20 PM

ப்ரீமியம்
கம்பீரம் வீசும் அரண்மனை

கம்பீரமான கற்கோட்டை, கணத்த தூண்கள், வியக்கும் கோபுரம், விசாலமான அரசவை என சினிமா மூலம் நாம் அறிந்த அரண்மனைகளுக்கு நேர்ரெதிரானது பத்மநாபபுரம் அரண்மனை. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோயிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. கி.பி.1601-ம் ஆண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது. இது தமிழகத்தின் மூவேந்தர்களில் ஒருவராகக் கருதப்படும் சேர மன்னர்களின் குலத்தில் வந்ததாகச் சொல்லப்படும் திருவிதாங்கூர் அரசப் பரம்பரையினரின் அரண்மனை. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழர்கள் வீழ்ச்சிக்குப் பிறகுதான் திருவிதாங்கூர் அரசவம்சம் உருவாகிறது. இவர்கள் அதுவரை திருப்பாம்பரம் என்னும் பெயரில் கல்குளம் கிராமத்தில் இருந்தனர். தங்களைச் சேரன் செங்குட்டுவனின் வழியினர் எனச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் திருவிதாங்கூர், வேணாட்டை உள்ளடக்கிய பகுதியாக மட்டுமே இருந்தது. அதனால் இவர்களுக்கு வேண்டாட்டு அரசவம்சம் என்ற பெயரும் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x