Published : 12 May 2020 09:37 AM
Last Updated : 12 May 2020 09:37 AM

ஊரடங்கு பொழுதுகளும் சமூக ஊடகங்களும்

மிது

கரோனா ஊரடங்கு 45 நாட்களைக் கடந்துவிட்டது. இந்த 45 நாட்களில் இந்தியர்கள் தங்கள் பொழுதுகளை பெரும்பாலும் தொலைக்காட்சி அலை வரிசைகள், சமூக ஊடங்களிலேயே கழித்து வருகிறார்கள். குறிப்பாக சீன நிறுவனமான டிக்டாக்கை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

* ஊரடங்குக்கு முன்பு டிக்டாக் செயலியில் இந்தியர்கள் சராசரியாக 39.5 நிமிடங்களைச் செலவிட்டு வந்துள்ளனர். ஊரடங்குக்குப் பிறகு இது 56.9 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

* லைவ் வீடியோ ஸ்ட்ரீம் செயலிகளிலும் இந்தியர்கள் அதிகமாகக் களமாடியுள்ளனர். குறிப்பாக லைவ்.மீ என்ற இணையத்தில் இந்தியர்கள் செலவிட்ட நேரம் 66 சதவீதத்தி லிருந்து 315 சதவீதமாக இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் 80 கோடிப் பயனாளர்களைக் கொண்டுள்ளது ஃபேஸ்புக். இதில் செலவிடும் நேரம் ஊரடங்குக் காலத்தில் 45 நிமிடங்களிலிருந்து 65 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

* இதேபோல இன்ஸ்டாகிராமில் சராசரியாக 23 நிமிடங்கள் செலவிட்ட இந்தியர்கள், ஊரடங்குக் காலத்தில் 36 நிமிடங்கள் செலவழித்துள்ளனர்.

* ஊரடங்கு நாட்களில் நாள்தோறும் ஃபேஸ்புக் செயலியைத் திறக்கும் எண்ணிக்கை 13.9 முறையிலிருந்து 20.8 முறையாக அதிகரித்துள்ளது.

* அதேநேரம் மற்ற செயலிகளைத் திறக்கும் எண்ணிக்கை: இன்ஸ்டாகிராம் 12-லிருந்து 19 ஆகவும், டிக்டாக் 8.6-லிருந்து 13.2 ஆகவும் ட்விட்டர் 7.9-லிருந்து 10.5 முறையாகவும் அதிகரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x