Last Updated : 10 May, 2014 06:28 PM

 

Published : 10 May 2014 06:28 PM
Last Updated : 10 May 2014 06:28 PM

உற்சாகத்தின் பிரவாகம்

குற்றாலம் என்றதும் பொங்கிப் பெருகும் நதி நீர் நம் மனத்தில் தெறிக்கும். குற்றாலத்தைப் போன்று பாறைகளில் மோதி நுரைத்து எழும் அருவிகளைப் பார்க்கும்போது குளிர்ச்சி அடையாதோர் உண்டா? ஆகாயகங்கை, உலக்கை அருவி, திற்பரப்பு அருவி, சுருளி அருவி, கோவைக் குற்றாலம், கும்பக்கரை அருவி என உங்கள் கோடையைக் குளிர்விக்கும் அருவிகள் தமிழ்நாட்டில் அநேகம். அது போன்ற அருவிகள் குறித்து சிறு அறிமுகம்.

l கோவைக் குற்றாலம்

கோவைக் குற்றாலம், கோயம்புத்தூரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அருவி அமைந்துள்ள சாடிவயல் என்னும் கிராமம், மரங்கள் அடர்ந்த குளுமையான வனப் பகுதியாகும். இந்தப் பகுதிகள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. மே மாதத் தொடக்கத்திலேயே இங்கு குளுமையான காற்றுடன் மழைச் சாரல் அடிக்கத் தொடங்கிவிடும். இதனால் இந்தப் பகுதி கோடைச் சுற்றுலாவுக்கு ஏற்ற பகுதியாகும். சிறுவாணி அணை இந்த அருவிக்கு அருகில்தான் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி, சாடிவயல் செல்லும் பேருந்துகள் இந்த அருவிக்குச் செல்கின்றன.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x