Last Updated : 18 Aug, 2017 10:00 AM

 

Published : 18 Aug 2017 10:00 AM
Last Updated : 18 Aug 2017 10:00 AM

உலக ஒளிப்பட நாள்: எளிமையில் பொதிந்து கிடக்கும் அழகு

இயற்கை நிலக்காட்சிகளாலும் பிரகாசமான வண்ணங்களாலும்தான் ஒளிப்படங்கள் ரசிக்கப்படுகின்றன என்று நம்புகிறோம். ஒளிஓவியர் நெய்வேலி செல்வனின் படங்கள் அந்த நம்பிக்கையை மாற்றுகின்றன.

18CHVAN_Photographer_selvan_14.jpg ந. செல்வன்

அவருடைய கிராமத்துக் காட்சிகள், எளிய மனிதர்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் இடம்பெற்றுள்ள படங்கள் மாறுபட்ட அழகை முன்னிறுத்துகின்றன.

அடிப்படையில் ஓவியரான செல்வன், கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரியும் செல்வன், படமெடுப்பதற்காகக் கிராமங்களை நோக்கிப் பயணிக்கிறார்.

பெட்டர் போட்டோகிராஃபி, ஏஷியன் போட்டோகிராஃபி, அலைவ் உள்ளிட்ட தேசிய இதழ்களிலும் மாநில இதழ்களிலும் இவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பத்திரிகை அட்டைகளை அலங்கரித்துள்ளன. ஓவியத்துக்கு இணையான அவருடைய சில படங்கள் இங்கே

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x