

“ விற்பனையைப் பொருட்படுத்தாமல், சமூக சிந்தனையை ஓவியமாக்க ஒரு தைரியம் வேண்டும்.இங்கு நடத்தப்பட்ட கண்காட்சிகளிலேயே இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது’’ என ஆச்சரியத்துடன் கூறிச் செல்கிறார் பார்வையாளர் ஒருவர்.
“என்னோட ஓவியங்கள் பெரும்பாலும் எண்ண ஓட்டத்துடன் தொடர்புகொண்டவை. கண் விழி, விழித்திரை, மூளை, பிரபஞ்சம் இவையெல்லாம் எண்ணத்தோட நெருக்கமானவை. அதனாலேயே அதை அதிகம் பயன்படுத்துறேன்.
அதேபோல, வியாபார நோக்கத்தைத் தாண்டி, சமூகப் பிரச்சினைகளைக் கொஞ்சமாவது சொல்லணும். மக்களுக்கு அதை எளிமையாகப் புரியவைக்கணும். என்னோட கலை அதைச் செய்யணும். அதான் முக்கியம் என்கிறார்” ஓவியர் ரமேஷ்.
மற்றொரு ஓவியரான கே.எஸ்.நாதன், பென்சில் வரைபடக் கலை மூலம் நுணுக்கமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த இவர், தனது மாநிலத்தின் சிறப்பான கதகளி நடன முக பாவனைகளையும், கேரள யானையின் பிரமிப்பான முகத்தழகையும் அழகியல் ஓவியமாக வைத்துள்ளார்.
கேரளம் குறித்த செய்திகள் மலையாள மொழியில் சிதறிக் கிடக்க, அதன் பின்னிருந்து கிழிந்த சட்டையுடன் எட்டிப் பார்க்கும் ஏழைச் சிறுவன் மூலம் அம்மாநிலத்தின் இன்னொரு முகத்தை அவர் காட்டியிருக்கிறார். இவர்களுடன் கே.சித்தார்த்தன், ராபின் வி.சிபி ஆகியோரின் ஓவியங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.
மற்றொரு ஓவியரான கே.எஸ்.நாதன், பென்சில் வரைபடக் கலை மூலம் நுணுக்கமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த இவர், தனது மாநிலத்தின் சிறப்பான கதகளி நடன முக பாவனைகளையும், கேரள யானையின் பிரமிப்பான முகத்தழகையும் அழகியல் ஓவியமாக வைத்துள்ளார்.
கேரளம் குறித்த செய்திகள் மலையாள மொழியில் சிதறிக் கிடக்க, அதன் பின்னிருந்து கிழிந்த சட்டையுடன் எட்டிப் பார்க்கும் ஏழைச் சிறுவன் மூலம் அம்மாநிலத்தின் இன்னொரு முகத்தை அவர் காட்டியிருக்கிறார். இவர்களுடன் கே.சித்தார்த்தன், ராபின் வி.சிபி ஆகியோரின் ஓவியங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.
ஓவியக் கண்காட்சி அழகியல் சார்ந்தது. அதை ரசிக்க ஓவிய ரசனை தேவை, சாதாரண மக்களுக்குப் புரியாது போன்ற எண்ண ஓட்டங்களைத் துடைத்தெறிகின்றன இந்த ஓவியங்கள். பக்கம் பக்கமாகப் படித்துப் புரிய வேண்டிய பல செய்திகளை, இந்தப் புதுமை ஓவியர்களின் ஒற்றை ஓவியம் செய்துவிடுகிறது என்பது சிறப்பு.
ஓவியர்கள்:
ரமேஷ், கே.எஸ்.நாதன்