

காய்கறிக் கடைகளில் காய்களை உற்று உற்றுப் பார்த்து நல்ல காய்களைத் தேடி எடுப்பவர் களைக் கவனித்தது உண்டா? அவ்வாறு செய்பவர்களை நான் ரசித்திருக்கிறேன். அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முயன்றதும் உண்டு. தானும், தன்னுடைய குடும்பத்தினரும் சத்தான உணவை உண்ண வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் மிக முக்கியமானது.
எல்லா உணவு வகைகளும் எல்லாருக்கும் ஒத்துப்போவதில்லை. என் தோழனுக்குப் பருப்பு சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஆகுமென்று, அவன் அம்மா பருப்பு இல்லாமல்தான் சமைப்பார்.