Published : 02 May 2025 06:43 AM
Last Updated : 02 May 2025 06:43 AM
‘தைரியமா இரு, பாத்துக் கலாம்!’ இப்படிப் பலர் உங்களுக்குத் தைரியம் சொல்லிருக்கக் கூடும். ஆனால், நான் அப்படி சொல்லப் போவதில்லை. உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லருக்கு உயரம் என்றால் பயம். இப்படி நம் எல்லாருக்கும் ஏதாவது ஒன்றைக் குறித்துப் பயம் இருக்கலாம். நம் வாழ்க்கை, படிப்பு, பொருளாதார நிலைமை, நட்பு, காதல், குடும்பம் என்று பல விஷயங்களை நினைத்து நாம் பயப்படலாம்.
கற்கால மனிதர்களுக்குத் தன் உயிர் மேல இருந்த பயம்தான், அவர்கள் உயிரையே காப்பாற்றியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா. பயப்படுவது தவறு இல்லை. பயம் இல்லாத மாதிரி நடிக்கும் போதுதான் பிரச்சினையே! யோசித்துப் பாருங்கள், கற்கால மனிதன் சிங்கத்திடம் பயத்தை மறைக்க பஞ்ச் டயலாக் பேசியிருந்தால்? ‘பயமா? எனக்கா? ஹா.. ஹா..’ன்னு சிரிக்கும் போதே சிங்கம் பாய்ந்திருக்கும். எல்லா உணர்வுகளையும்போல பயமும் நம் வாழ்க்கையில் ஒரு சீக்ரெட் ரெசிபிதான். ஆனால், அது ஒரு முக்கியமான மூலப்பொருள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT