இங்க நாங்கதான் கிங்கு! | ஈராயிரத்தில் ஒருவன்

இங்க நாங்கதான் கிங்கு! | ஈராயிரத்தில் ஒருவன்
Updated on
2 min read

சமூக வலைதளம் என்பதே உலகம் மொத்தமும் நாடு, மொழி, இனம் கடந்து ஒரு சமூகமாக மனிதர்கள் பரஸ்பரம் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளம்தான். ஆனால், இப்போதோ நாடு, மாநிலம் என ஆரம்பித்து மாவட்டம், தாலுகா, கிராமம் வரை இன்ஸ்டகிராமை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் இந்த ஈராயிரக் குழந்தைகள்.

ரயில் நிலையங்களில் நெட்டுக்குத்தலாக நிற்கும் ஊர்ப் பெயர் பலகைக்குக் கீழே நின்றபடி ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நான்கு சிறுவர்கள், தங்கள் ஊர்ப் பெருமைகளைப் பேசிவிட்டு, காலரைத் தூக்கிவிட்டு, நாக்கை மடித்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் ‘ஸ்லோமோஷ’னில் நடந்து கொண்டிருப்பார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in