Last Updated : 26 Apr, 2024 09:00 AM

 

Published : 26 Apr 2024 09:00 AM
Last Updated : 26 Apr 2024 09:00 AM

ப்ரீமியம்
இது ‘களிமண்’ ஊரு!

தமிழ்நாட்டில் கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடும் திருவிழா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பழைய பாரதிராஜா படங்களில் செம்பில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள். அதுபோன்ற ஒரு திருவிழாதான் ‘களிமண் திருவிழா’. மஞ்சள் தண்ணீருக்குப் பதில் ஒருவர் மேல் ஒருவர் களிமண்ணை வாரி இறைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்தத் திருவிழா தென் கொரியாவில் பிரபலமான கேளிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. 1998இல் போராயாங் என்னும் தென் கொரியக் கடற்கரை நகரில்தான் இந்தத் திருவிழா முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

16 வகை நிகழ்ச்சி: போராயாங் நகரக் கடற்கரையான டெய்சனில் கிடைக்கும் களிமண் விஷேச குணமுடையது. சாக்கடலில் கிடைக்கும் களிமண்தான் உலகத்திலேயே கனிம வளமிக்க களி மண்ணாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தக் களிமண்ணைவிட டெய்சன் கடற்கரைக் களிமண்ணில் கனிம வளம் அதிகம். ஜெர்மானியம், பெண்டோனைட், ரேடியட் போன்ற கனிமங்கள் இந்த மண்ணில் இருக்கின்றன. இந்தக் களிமண்ணைப் பயன்படுத்திப் பலவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான முறையில் உடல்பொலிவு பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x