

தேசிய விருதுகளைப் பெறும் திரைப்படங்கள் குறித்த சர்ச்சை, குஜராத்தி தொடங்கி மலையாளம் வரை திரைக்கலை செழித்திருக்கும் எல்லா மொழிகளிலும் தொடக்கம் முதலே வாடிக்கைதான். அதேநேரம், விருது பெற்ற படங்களைச் சக இயக்குநர்களே விமர்சிப்பது தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத போக்கு.
இந்த விமர்சனங்களுக்கு நடுவே தேசிய விருதுகளை அள்ளி வந்திருக்கும் நான்கு சிறந்த கலைஞர்கள், இந்த விருதுகளை வெல்வதற்கு முன்பே தற்செயலாக ‘ஓம் - சேப்டர் 1 உதிரம்: தி பிளட் வுட்’ என்கிற ஒரே தமிழ்ப் படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். அவர் களில் மூத்தவர் மம்மூட்டி.