

(உள்படம்) மனு ஆனந்த்
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தை எழுதி, இயக்கிக் கவனம் ஈர்த்தவர் மனு ஆனந்த். தற்போது ஆர்யா நாயகனாக நடிக்க கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் இணையான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
எதிர் பார்ப்பை உருவாக்கியிருக்கும் இப்படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
உங்களைப் பற்றிக் கொஞ்சம்...
நான் சென்னை பையன். பள்ளியில் விஜய் என்னுடைய சூப்பர் சீனியர். இளங்கலை பிசியோதெரபி முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா போய் முதுகலை முடித்து அங்கேயே பணி புரிந்து வந்தேன்.
ஆனால், சிறுவயது முதலே சினிமாதான் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. குறும்படம், ஆவணப்பட அனுபவங்களுக்குப் பின் கௌதம் மேனன் சாரிடம் உதவி இயக்குநராக 8 வருடம் வேலை செய்தேன். ‘எஃப்.ஐ.ஆர்’ எனது முதல் படம். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளி யான ‘ஆர்யன்’ படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதினேன். இப்போது ‘மிஸ்டர் எக்ஸ்’.