Last Updated : 29 Mar, 2023 01:17 PM

 

Published : 29 Mar 2023 01:17 PM
Last Updated : 29 Mar 2023 01:17 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 30 | சம்சாரம் என்பது வீணை

பி.ஜி.எஸ்.மணியன்

இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது இசை. கேட்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பத்தை கொடுக்கவல்லது இசை ஒன்று தான். இந்துஸ்தானி இசை, கர்னாடக இசை இரண்டிலும் உள்ள இனிமை என்கிற அம்சத்தை தனதாக்கிக்கொண்டு கூடவே மேற்கத்திய இசையின் நயங்களையும் பயன்படுத்திக்கொண்ட காரணத்தால் திரையிசை வெகுஜன ரசிகர்களையும் தன் வயப்படுத்திக்கொண்டு விட்டது.

திரையிசை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கே உரிய பாணியைக் கையாண்டு மக்களின் செவிகளில் இசைத்தேன் வார்த்த காரணத்தால் ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, பிரதேசம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அவர்களை அடைக்க முடியவில்லை. இல்லாவிட்டால் ஒரு கண்டசாலாவும், எஸ். ராஜேஸ்வர ராவும், வி. தட்சிணா மூர்த்தியும் தமிழ் திரை இசைக்கு காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களைத் தந்திருக்க முடியாது. (அவை அளவில் குறைவாக இருந்தாலும் கூட ) இந்த வரிசையில் கன்னடத் திரை உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு இசை அமைப்பாளர் எழுபதுகளில் தமிழ்ப் பட உலகில் அழுத்தமாக தனது பெயரைப் பதித்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தான் விஜயபாஸ்கர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x