Last Updated : 24 Mar, 2023 06:23 AM

 

Published : 24 Mar 2023 06:23 AM
Last Updated : 24 Mar 2023 06:23 AM

ப்ரீமியம்
டி.எம்.எஸ். 100 | வாழ்க்கையைப் பாடிய மூன்றெழுத்து

நம் வாழ்வின் மகிழ்ச்சி, காதல், கோபம், கழிவிரக்கம், இயலாமை, வீரம், ஊடல், கூடல், பிரிவு, சோகம், நிலையாமை எனப் பல உணர்ச்சிகளுக்குமான பாடல்களை நமக்காக பாடிவிட்டுச் சென்றிருப்பவர் டி.எம். சௌந்தரராஜன். ‘தொகுளுவ’ என்னும் குடும்பப் பெயரும் தந்தை பெயரும் சௌந்தரராஜன் பெயருக்கு முன்னொட்டாக (டி.எம்.எஸ்.) அமைந்தன.

சிறுவயதிலிருந்தே இசையின்மீது தணியாத தாகத்துடன் இருந்தவர் டி.எம்.எஸ். பள்ளி இறுதிவரை மட்டுமே படித்த அவர், அதன்பின் இசையை முழுநேரம் படிக்கத் தொடங்கினார். காரைக்குடியைச் சேர்ந்த ராஜாமணியிடம் கர்னாடக இசையை ஆழமாகக் கற்ற டி.எம்.எஸ்., மேடைகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்திவந்தார். அந்நாளில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடையில் பாடித் தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x