Published : 20 Jan 2023 06:38 AM
Last Updated : 20 Jan 2023 06:38 AM

ப்ரீமியம்
அஞ்சலி: பாலமுருகன் | அன்புக் கரங்கள்

‘பட்டிக்காடா பட்டணமா’ படப்பிடிப்பில் இயக்குநர் பி.மாதவன், சிவாஜி கேணசன், பாலமுருகன்

ரவிசுப்பிரமணியன்

சிவாஜியின் திரைப்பட வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் பாலமுருகன். சிவாஜிக்காக எழுதிய கதாசிரியர்களில் இவரும் ஒருவர். 40 ஆண்டுகாலத் திரைத்துறை வாழ்வில் இரண்டு படங்களை இயக்கி, ஏறத்தாழ ஐம்பது திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாலமுருகன், சிவாஜிக்கு பன்னிரண்டு படங்களுக்குக் கதை - வசனம் (இரண்டு படங்களுக்கு வசனம் மட்டும்) எழுதியுள்ளார்.

அதிகமான பாடல்கள் இடம்பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டத்தில், 1930களில், கதாசிரியர் இளங்கோவன் வசனம் எழுதிய படங்கள் வெளிவந்ததும் தமிழ் வசனங்களின் ருசி அதைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன. இளங்கோவன் போட்டுக்கொடுத்த ராஜபாட்டையின் வழியே சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, சக்தி. கிருஷ்ணசாமி, ஏ. பி. நாகராஜன் உள்ளிட்ட பல கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் புகழ்பெற்றார்கள். அந்த வழியில் வந்தவர்தான் பாலமுருகன். திராவிடப் பாரம்பரியத்தில் வந்த அவர், அண்ணாவின் நாடக எழுத்துக்களுக்காக அவரிடம் சில காலம் உதவியாளராகவும் இருந்தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x