Published : 14 Jan 2023 03:15 PM
Last Updated : 14 Jan 2023 03:15 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 24 | சாவித்திரியின் கோமாதா பூஜை!

சென்ற வாரம் உழவர் திருநாளை ஒட்டிய பாடல் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட நான், இந்த வாரம் பொங்கல் பண்டிகையின் அடுத்துவரும் நாளை தனதாக்கிக்கொண்ட பாசுவின் பெருமையைப் பறைசாற்றும் ஓர் ஈடு இணையற்ற பாடலின் சிறப்பம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

'திருவிளையாடல்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஏ.பி. நாகராஜன் தனக்கான களம் புராணப் படங்கள் தான் என்று முடிவெடுத்து அதில் அடித்து விளையாட ஆரம்பித்தார். புதுமைப்பித்தனின் குறுநாவல் ஒன்றுக்கு திரை வடிவம் எடுத்து 'சரஸ்வதி சபதம்' என்று பிரம்மாண்டமாக தயாரிக்க ஆரம்பித்தார்.1966 -ஆம் ஆண்டு வெளிவந்த 'சரஸ்வதி சபதம்' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, சிவகுமார், கே.ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருந்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுத திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன் அவர்களின் மகத்தான இசை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது. திருவிளையாடல் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது படங்களை கே.வி.மகாதேவனின் இசையோடுதான் ஆரம்பிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார் ஏ.பி. நாகராஜன். அவரது அந்த சென்டிமென்டுக்கு என்றபடி சரஸ்வதி சபதமும் கே.வி மகாதேவனின் இசையில் அமைந்த பாடலுடன் தான் ஆரம்பமாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x